உஸ்மானியா மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் உள்பட 69 பேருக்கு கொரோனா
தெலுங்கானாவின் உஸ்மானியா மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள், பணியாளர்கள் என 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அமைந்துள்ள உஸ்மானியா மருத்துவமனையின் சூப்பிரெண்டு நாகேந்தர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மருத்துவ மாணவர்கள், பணியாளர்கள் என 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவர்களில் 20 பேர் இளநிலை மாணவர்கள், 10 பேர் முதுநிலை மாணவர்கள், இணை பேராசிரியர் ஒருவர், உதவி பேராசிரியர்கள் 3 பேர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் 35 பேர் ஆவர் என தெரிவித்து உள்ளார்.
அவர்களில் பலருக்கு லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன. அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.