பீகார்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-01-15 07:52 GMT
பாட்னா,

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் சோட்டா பஹாரி என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்துள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்த அனைவரும் நேற்று இரவு தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் கிராமத்தின் தெருவிலேயே படுத்து உறங்கியுள்ளனர். அவர்களில் சிலர் இன்று காலை வெகுநேரம் ஆகியும் கண் விழிக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவர்களை எழுப்பியுள்ளனர். 

அப்போது, 5 தூக்கத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தனர். அந்த இருவரையும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்