கேரளாவில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது

Update: 2022-01-16 13:35 GMT
திருவனந்தபுரம் ,

கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்த்து கொண்டே வருகிறது .இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை  மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது .கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,123-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4  ஆயிரத்து 749  பேர் குணமடைந்துள்ளனர்.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,03,864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 8  பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்