கேரளாவில் 28 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது .கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28, 481- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் . கொரோனா பாதிப்பால் இன்று 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும், 7,303- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,42,512- ஆக உயர்ந்துள்ளது.