காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது; வெடிபொருட்கள் பறிமுதல்

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதியை போலீசார் கைது செய்து வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-22 15:39 GMT


புல்வாமா,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதியின் செயல்பாடுகள் பற்றி அறிந்த போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், அவந்திபோராவின் ரென்ஜிபோரா என்ற பகுதியை சேர்ந்த உமர் பரூக் பட் என்ற பயங்கரவாதியை போலீசார் கைது செய்து செய்தனர்.  அவரிடம் இருந்து, வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

அவர் பயங்கரவாதிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கியும் வந்துள்ளார்.  ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு ரகசிய தகவல்களை வழங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் உமர் மீது உள்ளது.  இதுபற்றி அவந்திபோரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்