கர்நாடகாவை அதிரவைத்த கொரோனா..தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது

கர்நாடகாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து796- ஆக உள்ளது.

Update: 2022-01-23 14:00 GMT
பெங்களூரு,

கர்நாடகாவில்  கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று  50 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 22, 842- பேர் குணம் அடைந்துள்லனர். தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து796- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 22.77 சதவிகிதமாக உள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய 2 லட்சத்து 20 ஆயிரத்து 459-மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்