கேரளாவில் 49 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
திருவனந்தபுரம்
கேரளாவில் தினசரி பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 49,771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 34 ஆயிரத்து 439 பேர் குணமடைந்துள்ளனர்.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3,00,556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.