அரியானாவில் சாலை விபத்து; 3 பேர் உயிரிழப்பு

அரியானாவில் சாலை விபத்தில் கார் சிக்கியதில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2022-02-05 22:17 GMT

ரோக்தக்,


அரியானாவின் ரோக்தக் நகரில் லாஹ்லி கிராமம் அருகே கார் ஒன்று சாலை விபத்தில் சிக்கியது.  இதில் 3 பேர் உயிரிழந்தனர்.  அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு ரோக்தக் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என கலநாவுர் போலீஸ் அதிகாரி சுசீலா தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்