டெல்லியில் நர்சரி முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
டெல்லியில் நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
புதுடெல்லி,
கடந்த ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா மூன்றாம் அலையின் காரணமாக நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில், நாட்டில் வைரஸ் பரவல் பரவலாக குறைந்து வரும் நிலையில் மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் வைரஸ்பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடந்த 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து தற்போது நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.