காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2022-04-23 14:33 GMT


குல்காம்,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மீர்ஹாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இதில், ஒரு பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு கொன்றனர்.  தொடர்ந்து நடந்த என்கவுண்ட்டரில் மற்றொரு பயங்கரவாதியும் கொல்லப்பட்ட நிலையில், மொத்தம் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  எனினும், தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்