டெல்லியில் சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 393 பேருக்கு தொற்று

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-17 13:55 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று 393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 19,01,128 ஆக உயர்ந்துள்ளது

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,198 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று 709 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  

இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,72,020 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 2,910 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்