குஜராத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது

கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Update: 2023-05-22 22:35 GMT

ஆமதாபாத்,

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஆமதாபாத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், 4 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததுடன், சட்ட விரோதமாக தங்கியிருந்ததும் தெரியவந்தது.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அவர்கள் தங்கள் அமைப்புக்கு நிதி திரட்டுதல், இளைஞர்களை அமைப்பில் சேர்த்தல், பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுதல் போன்ற பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் இருந்து பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்