எச்.டி.கோட்டை அருகே கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை

எச்.டி.கோட்டை அருகே கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபா்களை போலீசார் வாலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-09-01 18:45 GMT

எச்.டி.கோட்டை

குடும்ப தகராறு

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா நேரலே கிராமத்தை சேர்ந்தவர் புட்டசாமி. இவரது மகன் பானுபிரகாஷ் (வயது 23). இவர் தனது செல்போனில் இருந்து அதேப்பகுதியை சோ்ந்த இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

அந்த இளம்பெண் அதனை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் பானுபிரகாஷ் குடும்பத்தினருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை கிராம பிரமுகர்கள் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கபினி ஆற்றங்கரையோரம் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக எச்.டி.கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்போில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

முன்விரோதம்

விசாரணையில், அவர் நேரலே பகுதியை சேர்ந்த பானுபிரகாஷ் என்பது தெரியவந்தது. இவரை மர்மநபர்கள் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர், போலீசார் பானுபிரகாசின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் முன்விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்