நடிகர் அர்ஜுனின் மகள் துவங்கிய புதிய நிறுவனம் - துவக்க விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

‘சார்ஜா’ என்ற பெயரில் நடிகர் அர்ஜுனின் மகள் புதிதாக ஹேண்ட் பேக் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

Update: 2022-09-09 12:59 GMT

ஐதராபாத்,

நடிகர் அர்ஜுனின் மகள் அஞ்சனா அர்ஜுன், புதிய ஹேண்ட் பேக் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் உலகிலேயே முதல் முறையாக பழங்களின் தோல்களைக் கொண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

'சார்ஜா' என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் துவக்க விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குனர் விஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்