உத்தரகாண்டில் பனிச்சரிவு - மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு

உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-10-06 23:06 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் உள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 41 பேர் கொண்ட குழு, அதே மாவட்டத்தில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச்சிகரத்தில் ஏறியது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை, அங்கிருந்து திரும்பியபோது, 17 ஆயிரம் அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதில், மலையேற்றத்தில் தேசிய சாதனை படைத்த வீராங்கனை உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், நேற்று நடந்த மீட்புப்பணியின்போது, மேலும் 12 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இன்னும் 19 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்