காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரை கண்டித்து சோனியாகாந்தி வீடு நோக்கி பா.ஜனதா பேரணி

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரை கண்டித்து சோனியாகாந்தி வீடு நோக்கி பா.ஜனதா சார்பில் பேரணி நடைபெற்றது.

Update: 2023-02-21 20:36 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, சமீபத்தில் பிரதமர் மோடி-தொழில் அதிபர் அதானி இடையே தொடர்பு இருப்பதாக கூறும்வகையில், மோடி பெயரை 'நரேந்திர கவுதம்தாஸ் மோடி' என்று குறிப்பிட்டார். மோடியின் தந்தை பெயரான தாமோதர்தாஸ் என்பதை கவுதம்தாஸ் என்று மாற்றி இருந்தார்.

இதன்மூலம், மோடியின் தந்தையை பவன் கேரா இழிவுபடுத்திவிட்டதாக கூறி டெல்லி பா.ஜனதா சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

டெல்லி பா.ஜனதா செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் டெல்லியில் ஜன்பத் சாலையில் உள்ள நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இல்லம் நோக்கி பேரணியாக சென்றனர்.

ஜன்பத் சாலையில் சோனியா வீடு அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதால், அங்கேயே போராட்டம் நடத்தினர். அப்போது, காங்கிரசுக்கும், பவன் கேராவுக்கும் எதிராக கோஷமிட்டனர். பவன் கேராவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்