அரியானாவில் பாயிலர் வெடித்து விபத்து: 40 பேர் படுகாயம்

அரியானாவின் ரேவாரி நகரில் உள்ள தொழிற்சாலையில் பாயிலர் ஒன்று வெடித்ததில் சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-03-16 17:49 GMT

ரேவாரி (அரியானா) ,

அரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று மாலை பாயிலர் வெடித்ததில் சுமார் 40 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்நகரின் தருகேரா பகுதியில் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். சுரேந்தர் யாதவ் கூறுகையில், "ரேவாரி, தருகேராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பாயிலர் வெடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ்களை தொழிற்சாலைக்கு அனுப்பினோம். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது வரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை" என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை ரேவாரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்