சர்சையான கச்சத்தீவு புத்தர் சிலை - தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து

கச்சத்​தீவில் புத்தர் சிலை தொடர்பாக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து கூறியுள்ளார்.

Update: 2023-03-26 15:16 GMT

திருச்சி,

கச்சத் தீவில், இலங்கை கடற்படையினர் 2 புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூற முடியாது என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஒவ்வொரு இடங்களிலும் ஒருசில பிரச்சினைகள் வரும்போது, வழிபாட்டுத்தலங்களை அந்த பிரச்சினைக்குள் கொண்டுவரக்கூடாது என்பது தான் எனது எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்