சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பெங்களூரு கோர்ட்டு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

Update: 2024-03-04 21:17 GMT

கோப்புப்படம் 

பெங்களூரு,

சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் பரமேஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 4-ந் தேதி (நேற்று) அமைச்சர் உதயநிதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், ஏற்பாட்டாளர் உள்பட மேலும் 3 பேருக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி பிரீத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி ஸ்டாலினோ அல்லது அவரது சார்பில் வக்கீலோ ஆஜராகவில்லை.

அதே நேரத்தில் மற்ற 3 பேரின் சார்பில் அவர்களது வக்கீல்கள் ஆஜராகி வக்காலத்து தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி, உதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த சம்மனை அங்குள்ள உள்ளூர் போலீஸ் இணை கமிஷனர் மூலம் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 26-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்