கிறிஸ்தவர்கள் அதிகளவு வாழும் மணிப்பூரில் ஈஸ்டர் ஞாயிறு அன்று அரசு வேலைநாளாக அறிவிப்பு

நிதியாண்டு முடிய உள்ளதால் மணிப்பூரில் ஈஸ்டர் ஞாயிறு அன்று அரசு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-28 10:28 GMT

கோப்புப்படம் 

இம்பால்,

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறு வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வருகிற ஈஸ்டர் ஞாயிறு அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30 மற்றும் 31 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களும் அரசு வேலை நாள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூரில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்