கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-27 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா நெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத் (வயது52). இவருக்கு சொந்தமாக நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில் ரங்கநாத் விவசாயம் செய்து வந்தார்.

இதற்காக அவர் வங்கி மற்றும் நண்பர்களிடம் ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் திரும்ப பணம் கேட்டு தொந்தரவு செய்தனர்.

இதனால் ரங்கநாத் மன கவலையில் இருந்து வந்தார். மேலும் கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரங்கநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிருங்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரங்கநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிருங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்