இந்தியா தற்போது சுதந்திரமான பொருளாதார பலம் மிக்க நாடாக பார்க்கப்படுகிறது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை ஒரு போதும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Update: 2022-12-31 10:26 GMT

நிகோசியா,

பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை ஒரு போதும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், "யங்கரவாதத்தின் மூலமாக இந்தியாவை யாரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது.

அதனை நாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இந்தியா அனைவருடனும் சுமூகமான உறவைப் பேணுவதற்கே விரும்புகிறது. ஆனால் அதற்காக, சுமூகமான உறவு என்பதற்கு மன்னித்துக் கொண்டே இருப்பது அல்லது விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. இதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. இந்தியா தற்போது சுதந்திரமான பொருளாதார பலம் மிக்க நாடாக உள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்