சிவமொக்காவில் என்ஜினீயர் மனைவி கொலை வழக்கில் 6 பேர் கைது

சிவமொக்காவில் என்ஜினீயர் மனைவி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-29 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா விஜயநகர் 2-வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கமலம்மா (வயது 57). இவரது கணவர் நீர்ப்பாசனத்துறை என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி கமலம்மா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் கமலம்மாவை கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து துங்கா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மர்மநபர்கள் பணத்துக்காக கமலம்மாவை கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்தனர். இந்த நிலையில், கமலம்மா கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் அனுமந்த நாயக், பிரபு, அப்புநாயக், பிரதீப் உள்பட 6 பேர் என்பது தெரியவந்தது. இவர்களில் அனுமந்த நாயக், கமலம்மா வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு அவர்கள் கமலம்மாவை கொன்றது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்