ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2023-04-09 11:36 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று அதிகாலை ராணுவப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 2.15 மணியளவில் பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.

இதையடுத்து ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.அவரது உடல் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. மற்ற 2 பேரும் காட்டுப்பகுதியில் தப்பி ஓடி விட்டனர். அவர்களை கைது செய்யும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்