மதுபான கொள்கை முறைகேடு வழக்கு; மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2023-06-05 09:31 GMT

டெல்லி

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்-மந்திரியாக இருந்தவர் மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் , 8 மணி நேர விசாரணைக்கு பிறகு இவரை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து ஜாமீன் கேட்டு இவர் மனு அளித்தார்.

கேட்ட கேள்விகளையே சிபிஐ மீண்டும் மீண்டும் கேட்பதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் ஜாமீன் மனுவில் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. மணீஷ் சிசோடியா சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்பதால் ஜாமீன் வழங்க முடியாது என கூறியது.

இதையடுத்து மணீஷ் சிசோடியாவின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தில் அவரை பார்ப்பதற்காக மணீஷ் சிசோடியாவுக்கு ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மணீஷ் சிசோடியா இடைக்கால ஜாமீன் கேட்டு இவர் மனு அளித்திருந்தார். இந்நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்