மணிப்பூரில் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவிப்பு

மணிப்பூரில் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.

Update: 2023-08-06 15:02 GMT

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. குக்கி இனத்தவர்களுக்கும் மெய்தி பழங்குடியின மக்களுக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பதற்றமாகவே இருந்து வருகிறது.

மணிப்பூரில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. முதல் மந்திரியாக பிரேன் சிங் உள்ளார். இந்த நிலையில், மணிப்பூரில் ஆளும் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது. குக்கி மக்கள் கூட்டணிக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். எனவே, ஆதரவை வாபஸ் பெற்றாலும் பிரேன் சிங் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றே தெரிகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்