ஸ்ரீரங்கப்பட்டணா அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஸ்ரீரங்கப்பட்டணா அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-11 18:45 GMT

மண்டியா-

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெலகொளா கிராமத்தை சோ்ந்தவர் சூர்யா. இவரது மனைவி தர்ஷினி (வயது 21). இவா்களது திருமணம் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சூர்யா கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சூர்யா, தர்ஷினி இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து சூர்யா வெளியே சென்றார். இந்தநிலையில் தர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கே.ஆர்.எஸ். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தர்ஷினி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கே.ஆர்.எஸ். போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்