புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவு அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவு அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-01 19:38 GMT

புதுடெல்லி

மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது சோலியை தோற்கடித்து முகமது முய்சு, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதிய அதிபர் முகமது முய்சுக்கு வாழ்த்துகள். நீண்டகால இந்தியா-மாலத்தீவு இருதரப்பு உறவை வலுப்படுத்தவும், இந்திய பெருங்கடல் பகுதியில் ஒட்டு மொத்த ஒத்துழைப்பை உயர்த்தவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.                 

Tags:    

மேலும் செய்திகள்