வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்ட தாமரை பூ வடிவிலான அலங்காரம் அகற்றம்

வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் தி.மு.க. புகார் அளித்தது.

Update: 2024-04-18 09:58 GMT

புதுச்சேரி,

நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தொடங்கி வரும் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

அதன்படி புதுச்சேரியின் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவத்தில் நுழைவு வாயிலில் அலங்காரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தகைய அலங்காரம் பா.ஜ.க.விற்கு உதவிகரமாக இருக்கும் என தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகாரளித்தனர். இதையடுத்து தாமரை பூ அலங்காரங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்