மும்பையில் நடைபெறுகிறது இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம்..!!

ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் மும்பையில் எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-08-03 16:58 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதற்கான முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது.

இதில் முதற்கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின. 26 கட்சிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் இந்த மாதம் (ஆகஸ்டு) 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்