பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 670 ஆக உயர்வு

சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-26 10:27 GMT

போர்ட் மோர்ஸ்பி,

தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள காக்களம் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால், பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. கிராமத்திற்கு செல்லும் சாலையும் பாதிக்கப்பட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ஐ.நா., அதிகாரி ஒருவர், நிலச்சரிவில் 150 வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டமானது. பலியானோரின் எண்ணிக்கை 670 ஐ தாண்டியதாக கூறியுள்ளார். இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களிலிருந்து வரும் ட்ரோன் காட்சிகள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. பெண்கள் தங்கள் உறவினர்களை தேடி கதறி அழும் காட்சிகள் காண்போரின் கண்களை குளமாக்கியது.

Tags:    

மேலும் செய்திகள்