காதலித்த 2 பெண்களை ஒரே நேரத்தில் கரம் பிடித்த காதலர்

2 பெண்களை காதலித்த நபர் இருவரின் ஒப்புதலுடன் ஒரே நேரத்தில் அவர்களை திருமணம் செய்து உள்ளார்.

Update: 2022-06-20 15:57 GMT



ராஞ்சி,



ஜார்க்கண்டின் லோஹர்டகா நகரில் பண்டா கிராமத்தில் வசித்து வருபவர் சந்தீப் ஓராவன். குசும் லக்ரா என்ற பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். அவருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.

மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தீப் வேலைக்கு சென்றுள்ளார். அந்த வேலைக்கு ஸ்வாதி குமாரி என்பவரும் வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து உள்ளது.

வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பின்னரும் அவர்களது சந்திப்பு தொடர்ந்து உள்ளது. அவர்களது இந்த காதல் அவர்களின் குடும்பத்தினருக்கும், கிராமத்தினருக்கும் தெரிய வந்துள்ளது. முதலில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தொடர்ச்சியாக எதிர்ப்பு நீடித்து வந்த நிலையில், கிராமத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. இதில், 2 பெண்களையும் சந்தீப் மணம் முடிக்க வேண்டும் என தீர்ப்பு முடிவானது.

இதற்கு அந்த 2 பெண்களோ அல்லது குடும்பத்தினரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் 3 பேரின் ஒப்புதலுடன், நடைமுறையில் இல்லாத இந்த திருமணம் பண்டா கிராமத்தில் இனிதே நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பின்பு சந்தீப் கூறும்போது, 2 பெண்களை ஒன்றாக திருமணம் செய்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால், இரண்டு பேரையும் நான் காதலிக்கிறேன். அவர்கள் இருவரில் ஒருவரை கூட என்னால் விட்டு விட முடியாது என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்