12 வயது சிறுமியை துன்புறுத்திய வாலிபருக்கு தண்டனை- கோர்ட்டு தீர்ப்பு

தானே வாக்ளே எஸ்டேட் பகுதியில் 12 வயது சிறுமியை துன்புறுத்திய வாலிபருக்கு தண்டனை

Update: 2022-09-07 12:15 GMT

தானே,

தானே வாக்ளே எஸ்டேட் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 12 வயது சிறுமியை பின்தொடர்ந்து சென்று பேச முயன்றார். தினசரி இதே போன்று சிறுமியை துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தாள். பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில் வாலிபர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனால் வாலிபர் குற்றவாளி என நீதிபதி வி.வி வீர்கர் தீர்ப்பு அளித்தார். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகள் ஏழு மாதமாக சிறையில் இருந்து வந்ததால் வாலிபருக்கு ரூ.1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபாராத தொகை செலுத்த தவறினால் மேலும் 10 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்