சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி இறுதிப்போட்டிக்கு ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.

Update: 2017-04-15 12:14 GMT
சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் இந்தோனேசியாவின் அந்தோணி கின்டிங்கை இந்திய வீரர் ஸ்ரீகாந்த் எதிர்கொண்டார். அப்போது இந்தோனேசியாவின் அந்தோணி கின்டிங்கை 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வீழ்த்தினார். இதன் மூலம் இறுதிப்போட்டியில் சக இந்திய வீரரான சாய் ப்ரணீத்தை ஸ்ரீகாந்த் எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகள்