ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், பிரணாய் கால் இறுதிக்கு முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிதம்பி ஸ்ரீகாந்த் மற்றும் எச்.எஸ். பிரணாய் ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Update: 2017-09-21 16:39 GMT
டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக தர வரிசையில் 8வது இடம் வகிக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் ஹூ யுன்னை 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி அரை மணிநேரத்தில் முடிந்தது.

இதேபோன்று மற்றொரு போட்டியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான இந்தியாவின் பிரணாய், சீன தைபே வீரரான சூ ஜென் ஹாவோவை 21-16, 23-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்தியாவின் சாய்னா நேவால் 16-21, 13-21 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக்கின் சாம்பியனான ஸ்பெயின் நாட்டின் கரோலீனா மெரீனிடம் தோற்று வெளியேறினார்.

மேலும் செய்திகள்