டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி; இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.;
டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால், அவர் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு பதக்கம் பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.