பங்குச்சந்தை துளிகள்

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.

Update: 2019-09-17 05:57 GMT
* பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் அறிவுறுத்துகிறது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.2,400-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.1,904.90-ல் முடிவுற்றது. இது கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.12 சதவீதம் உயர்வாகும்.

* மாருதி சுசுகி நிறுவனப் பங்குகளை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என எம்கே குளோபல் நிறுவனம் கூறி உள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.5,900-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.6,412.30-ல் நிலைகொண்டது. இது சென்ற வார இறுதி நிலவரத்தை காட்டிலும் 0.58 சதவீதம் சரிவாகும்.

* ஏ.சி.சி. நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என ஈடல்வைஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,846-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.1,529-ஆக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.20 சதவீத உயர்வாகும்.

* எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.1,055-ஆக நிர்ணயித்து இருக்கிறது. திங்கள்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.1,067.05-ல் நிலைகொண்டது. இது கடந்த வார இறுதி நிலவரத்தைக் காட்டிலும் 0.20 சதவீத இறக்கமாகும்.

* கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனப் பங்கினை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என ஈடல்வைஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.570-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 0.04 சதவீதம் அதிகரித்து ரூ.533.55-ல் முடிவுற்றது.

 நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

மேலும் செய்திகள்