விமான நிறுவனத்தில் வேலை

பி.டெக், ஐ.சி.ஏ.ஐ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. மற்றும் இதர அறிவியல் கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அதிகாரி தரத்திலான பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

Update: 2020-02-10 11:18 GMT
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின், துணை நிறுவனங்களில் ஒன்று ஏர்லைன் அல்லைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தில் சூப்பிரவைசர் (செக்யூரிட்டி) பணிகளுக்கு 51 பேரும், தலைமை மேலாளர், உதவி பொது மேலாளர், முதுநிலை மேலாளர், ஸ்டேசன் மேனேஜர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கு 36 இடங்களும் நிரப்பப்படுகிறது.

பி.டெக், ஐ.சி.ஏ.ஐ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. மற்றும் இதர அறிவியல் கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அதிகாரி தரத்திலான பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

சூப்பிரவைசர் (செக்யூரிட்டி) பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொண்டு இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 4-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.airindia.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

மேலும் செய்திகள்