பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்

பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான கோஹினூர், திருநங்கை மார்வியா மாலிக்கை செய்தி வாசிப்பாளராக நியமித்துள்ளது.

Update: 2021-04-17 11:14 GMT
பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் இவர். மூன்று மாதப் பயிற்சிக்குப் பிறகு கடந்த வாரம் பணியில் சேர்ந்தார். இதழியல் பட்டதாரியான மார்வியா, மாடலாகவும் பணியாற்றியுள்ளார். 

பல உலக நாடுகளை போன்றே பாகிஸ்தானிலும் திருநங்கை களின் வாழ்க்கை மோசமாகத்தான் கழிகிறது. தனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பணி திருநங்கையர் வாழ்வில் மேம்பாடு ஏற்படுத்துவதாக இருக்கும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மார்வியா மாலிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் அமைச்சரவை, சமீபத்தில்தான் திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.

மேலும் செய்திகள்