கடற்படையில் வேலை

இந்திய கடற்படையில் மாலுமி பணி, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2021-06-12 05:57 GMT
இந்திய கடற்படையில் மாலுமி பணி இடத்திற்கான ஆர்ட்டிபர் அப்ரண்டிஸ் (ஏஏ), இரண்டாம் நிலை அதிகாரி (எஸ்.எஸ்.ஆர்) என 2500 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-2-2001 முதல் 31-7-2004 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 30-6-2021. விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்