கோழிக்கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கோழிக்கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-10-05 19:45 GMT

ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் இளங்கோகிலகுரு தலைமையிலான அலுவலர்கள் நேற்று மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் மனிக்கூண்டு பகுதியில் 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கோழிக்கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை தீவிரமாக நடக்கும் என்றும், யாரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்