10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-09-07 20:00 GMT

கருப்பூர்:-

காடையாம்பட்டி அருேக 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

10-ம் வகுப்பு மாணவி

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி வாணிப தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இவருடைய மகள் கவுசிகா (வயது 14). இவர் பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தாயாருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கவுசிகா மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை கவுசிகா தனது வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றனர். மேலும் மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பூசாரிப்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்