பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி
நீடாமங்கலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் பொதுரக அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் 100 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் அரிசி மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர்.இதனை தொடர்ந்து சரக்கு ரெயில் அரிசி மூட்டைகளுடன் நாமக்கல்லுக்கு புறப்பட்டு சென்றது.