1,250 டன் ரேஷன் அரிசி வந்தது

புதுக்கோட்டையில் இருந்து சரக்கு ரெயிலில் 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது;

Update:2023-05-25 01:27 IST

நாகர்கோவில், 

புதுக்கோட்டையில் இருந்து 1,250 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயிலில் 21 வேகன்கள் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ரெயில் நேற்றுமுன்தினம் இரவு நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை வேகன்களில் வந்த அரிசி மூடைகள் லாரிகளில் ஏற்றி உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்