அரசு பஸ் மோதி 2 பேர் பலி

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது அரசு பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

Update: 2023-01-24 18:27 GMT

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது அரசு பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது..

மோட்டார் சைக்கிளில் சென்றனர்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள குலசேகரக்கால் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 52). இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் நேசாந்த்(22) என்பவரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.

இவர்கள் நேற்று தேவிபட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். பழங்குளம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பி உள்ளனர்.

2 பேர் சாவு

அப்போது சிவகங்கையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிளில் மோதியது. இந்த விபத்தில் முனியசாமி, நேசாந்த் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து பற்றி அறிந்ததும் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பலியான 2 பேரின் உடல்களை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்