கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கடையநல்லூர் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-10-16 00:15 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே துரைசாமியாபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக இலத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அபபோது அங்கு ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்த கோட்டையன் மகன் முத்துக்குமார், விருதுநகரை சேர்ந்த பெருமாள் மகன் இருளப்ப ராஜா ஆகியோர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்