மது விற்ற 2 பேர் கைது

வேதாரண்யம் அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-16 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை பகுதியில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபானம் விற்ற செம்போடை பகுதியைச் சேர்ந்த மேத்தா (எ) அன்பரசன் (வயது44), சேகர் (45) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்