பெரியதச்சூரில்புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைதுகடைக்கு சீல் வைப்பு

பெரியதச்சூரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-08-24 18:45 GMT


விக்கிரவாண்டி. 

விக்கிரவாண்டி அருகே உள்ள பெரியதச்சூர் பகுதியில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்து. இதையடுத்து கடை உரிமையாளர்களான பார்த்திபன் (வயது 33), கருணாநிதி (44) ஆகியோரை போலீசார் கைது செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்