சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 20 ஆண்டு சிறைகள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-01-24 19:06 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 59). இவர் புரோட்டா கடை வைத்து மாஸ்டராக பணியாற்றினார். இவர் 10 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ஜேசுராைஜ கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து ஜேசுராஜ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்