வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-01-24 19:16 GMT

நெல்லிக்குப்பம் அருகே உள்ள விலங்கல்பட்டை சேர்ந்தவர் பாவாடை மகன் ஸ்ரீதர் (வயது 28). இவர் கடந்த 1.7.2019 அன்று அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனது தாயுடன் வீட்டுக்கு வெளியே இரவு படுத்து தூங்கிய போது, அவரை தட்டி எழுப்பினார்.

பின்னர் அவர் எழுந்ததும், உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று அவரது வீட்டுக்கு சிறுமியை அழைத்துச்சென்றார். அங்கு சென்றதும் சிறுமியை ஸ்ரீதர் பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

20 ஆண்டு சிறை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீதரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.

அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் ஸ்ரீதர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சமூக நலத்துறை மூலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், நலவாழ்வு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்